வர்த்தக உறவுகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து பிரித்தானியா – இலங்கை பேச்சு

வர்த்தக உறவுகள் மற்றும் நல்லிணக்க செயன்முறை தொடர்பாக பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடமபெற்றது.

இதன்போது இரு நாடுகளுடனும் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வர்த்தகம், துறைமுக நகரம் மற்றும் பிற இடங்களில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலா துறையை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் புலம்பெயர் நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *