ஐ.பி.எல்.: கட்டாய வெற்றியை நோக்கி ராஜஸ்தான் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 40ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெறவுள்ள இப்போட்டியில், ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

பிளே ஓஃப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு இன்னமும் ராஜஸ்தான் அணிக்கு உள்ள நிலையில், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி அந்த அணி களமிறங்கவுள்ளது.

நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடிய ஹைதராபாத் அணி, முதல் அணியாக பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. இதனால் இன்று ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

இதுவரை இரு அணிகளும் 14முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஏழு வெற்றிகளை பகிர்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *