யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.