குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு..!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சேவைகள் இன்று திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *