
வெலிங்டன், Nk 09
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இவரது வருங்கால கணவர் கிளார்க் கேபோர்டு. இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்கிறார். இதை பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். ஜெசிந்தாவும், அவரது 3 வயது குழந்தையும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே அந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ.5 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

