ஜனாதிபதி 6ஆம் திகதி நள்ளிரவில் இருந்து அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர காலச் சட்டத்தை ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி இரத்துச் செய்திருந்தார்.
அதன்பின் ஒரு மாத காலத்துக்கு திரும்பவும் இதனை பிரகடனம் செய்வது அரசியலமைப்பின் 155(7) ஆம் உறுப்புரையில் தடுக்கப்பட்ட காரணத்தினால், முதல் சந்தர்ப்பத்திலேயே இதை மீளவும் அமுல் படுத்தியுள்ளார்.
இது வீணான பதற்றத்தையும் பயத்தையுமே தோற்றுவிக்கும் என இன்று காலை தனது ட்விட்டரில் சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.