
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதமர் பதவி விலகவுள்ளதாகவும் இராஜினாமா கடிதத்ததை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதேவேளை குறித்த தகவல்களை மறுத்து பிரதமரின் ஊடகப்பிரிவு செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கருத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.