தொடரும் நெருக்கடி நிலை; IMF உடனான பேச்சுவார்த்தைகளும் தீவிரம்.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடு மின்வெட்டு வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு ரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சில வாரங்களுக்கு முன் இலங்கையின் அரசதரப்பு குழுவினர் சர்வதேச நாணய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில் மீண்டும் நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றையதினம் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான மெய்நிகர் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகி ஜூன் 23 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின்(CBSL) மற்ற அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *