பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் நேரில் கலந்துரையாடிய மணிவன்ணன்!

கிளிநொச்சி – அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை சிதைத்த விஷமிகளின் செயற்பாட்டை, யாழ். மாவட்ட முதல்வர் மணிவன்ணன் நேரடியாக குறித்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

மேலும், அங்கு பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் செடிகளைபார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

இச் சம்பவம் குறித்து தெரியவருகையில்,

மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் வாழ்வாதாரத்திற்காக பயிரிட்ப்பட்ட 800மிளகாய் செடிகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இன்று யாழ் மாவட்ட முதல்வர் மணிவன்ணன் நேரடியாக குறித்த இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் செடிகளையும் பார்வையிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவியும் வழங்கி வைத்தார்.சட்ட உதவிகள் அனைத்தும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *