
மட்டக்களப்பு செங்கலடியில் நேற்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடகிழக்கு இணைப்பு செயலாளரும் வைத்தியமான கோல்டன் பெணான்டே,
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு நாட்டில் டொலர் இல்லாமையே முக்கிய காரணம் . எனவே ஏன் டொலர் இல்லாது போனது என காரணம் பார்த்தால் பிரதமர் மகிந்த ராஜபஷ தான் முக்கியமான காரணம் என தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் புலிகளினுடனான வன்னி யுத்தததின் போது விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்த தங்கங்களை எடுத்து கொலிகொப்டரில் கொண்டு சென்று அதனை உகண்டாவிற்கு அனுப்பியுள்ளனர்.
இதனை இந்த மக்களிடம் கேட்டால் கூட அப்படிச் தெரிவிக்கின்றனர்.அதேபோல விடுதலைப் புலிகளிடம் இருந்த அதிகமான கப்பல்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கே.பி என்பவரிடம் இருந்தது அந்த கப்பல்களை அவரிடமிருந்து மீட்டு அதனை ராஜபக்ச உறவினரது பெயரில் வேறு வேறு நாடுகளில் வைத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.
அதேவேளை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு என நூறு பில்லியன் டொலர் வந்தால் அதனை அந்த நாட்டிலே டீல் போட்டு அரைவாசியை அவர்கள் எடுத்துக் கொண்டு அரைவாசியை மட்டும் தான் இங்கு வந்தது.
அதுதான் உகண்டாவிற்கு கொண்டு போன டொலர் எல்லாம் இவற்றுக்கு எல்லாம் முக்கியமானவர் மகிந்ம ராஜபஷ உட்பட குடும்பமே கடும் கள்வர்கள் எனவும் இவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு உகண்டால் உள்ள தங்கம் எல்லாம் திருப்பி எடுத்துவரவேண்டும் என தெரிவித்தார்.