பிரதமர் பதவி விலகல் தொடர்பில் இணைப்பு செயலாளர் விளக்கம்!

அரசாங்கத்திற்கெதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்மாலிசாயவில் நேற்றையதினம் வழிபாடு செய்த பிரதமர் நேற்று மாலை தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்ததாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில் கொழும்பு திரும்பிய பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் பிரதமரது இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் இதுவரைக்கும் அவ்வாறான கடிதம் எதுவும் பிரதமரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *