பிரதமர் பதவி வேண்டாம்! சஜித் பிரேமதாஸ மறுப்பு!

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோத்தாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததாவது: இடைக்கால அரசாங்கம் தொடர்பிலும் பிரதமராகப் பொறுப்பேற்குமாறு சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பிலும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதியின் அழைப்பை சஜித் நிராகரித்துள்ளார். அதேநேரம் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்கி, பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களின்படி இடைக்கால அரசாங்கம் செயற்படுமானால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *