
பிரதமரின் வருகையைக் கண்டித்து அனுராதபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மகாபோதியை வழிபடுவதற்காக அநுராபுரத்துக்கு நேற்றுச் சென்றார்.
இதன்போதே பிரதமரின் வருகைக்கு பொதுமக்கள் ஒன்றுகூடி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.