
பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்றது.
தம்பாப்பிள்ளை கனகராசா (வயது 72) என்ற முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
இவரது இறப்புத் தொடர்பில் முள்ளிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.