இன்று பிரதமர் பதவி விலகுவார்: ஜகத் குமார எம்.பி

கொழும்பு, மே 09

விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று (09) அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என அரச வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பெசில் ராஜபக்ஷ இன்று காலை ஆயிரக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்துள்ளதுடன், உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தயாராகி வருகிறது. பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *