
கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை பாராளுமன்றிலும் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களாக பிரதமர் பதவி விலகவுள்ளதாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன.
இவ்வாறான நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து நீங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றையதினம் காலை முதல் கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர் இல்லமான அலரிமாளிகைக்கு முன்னாள் திரண்ட ஆதரவாளர்கள் பிரதமருக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.