
யாழ்ப்பாணம் சாட்டி கடற்பரப்புக்குத் தனது நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இராசரத்தினம் கணேசராஜா (வயது 45) என்ற நபரே உயிரிழந்தவர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. இறப்புத் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.