கொழும்பு – கம்பஹா மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குங்கள்! ஜனாதிபதி பணிப்புரை

லிட்ரோ நிறுவன தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆலோசனையொன்றை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ஒரு தொகையை கொழும்பு மற்றும் கம்பஹா மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு மற்றும் கம்பஹா நகரங்களில் வாழும் மக்களுக்காக தலா 15,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply