வாகன இறக்குமதிக்கட்டுப்பாடு டிசம்பரின் பின்னர் தளர்வு!

வாகன இறக்குமதிக்கட்டுப்பாடு டிசம்பரின் பின்னர் தளர்வு!

நாட்­டில் தற்­போது வாகன இறக்­கு­ம­தி­ïக்கு விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது தொடர்­பில் எதிர்­வ­ரும் டிசம்­பர் மாதம் தீர்­மா­னம் ஒன்றை எடுக்­கக்­  கூ­டி­ய­தாக இருக்­கும் என இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரால் தெரி­வித்­தார்.

நேற்று இணை­ய­வழி ஊடாக நடந்த கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது-
வாகன இறக்­கு­ம­திக்­குத் தற்­போது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­கள் எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் வரை தொட­ரும். அதன்­பின்­னர் ஆரா­யப்­பட்டு தீர்­மா­னம் ஒன்று எடுக்­கப்­ப­டும்.

தற்­போ­துள்ள கட்­டுப்­பா­டு­களை தக்­க­வைத்­துக் கொள்ள எதிர்­பார்க்­க­வில்லை. அதே­நே­ரம் ஒட்­டு­மொத்­த­மா­கத் தளர்­வு­களை மேற்­கொண்­டால் மீண்­டும் பிரச்­சி­னை­கள் வர­லாம். இந்த நிலை­மை­யைச் சமா­ளிப்­ப­தற்கு எமக்­குக் கால அவ­கா­சம் தேவை. இந்த நட­வ­டிக்­கை­கள் கட்­டம் கட்­ட­மா­கவே மேற்­கொள்­ளப்­ப­டும். – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *