
தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்!
தொண்டைமானாறு கடல் நீரேரியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, இத்தியடியைச் சேர்ந்த கந்தையா தேவராசா (வயது-–76) என்ற முதியவரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சடலமாக தொண்டைமானாறில் கண்டெடுக்கப்பட்டவர் நேற்றுமுன்தினம் முதல் காணாமல் போயிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை கடல் நீரேரியில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் சடலம் ஒன்று நீரேரியில் மிதப்பதை அவதானித்து அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். அதையடுத்துச் சடலத்தை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மல்லாகம் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

