அரசாங்கத்திற்கு எதிராக ரணில் எடுத்த முடிவால் குழப்பநிலை.

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றையதினம் காலை முதல் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லமான அலரி மாளிகையில் மகிந்தவின் ஆதரவாளர்கள் திரண்டு மகிந்தவுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை அங்கு அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான மைனா கோ கம கூடாரங்களும் மகிந்த ஆதரவாளர்களால் அடித்து நொருக்கப்பட்டன.

இதனால் அப் பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளதுடன் தற்போது அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அலரிமாளிகைக்கு முன் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கோகோதகம போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவதாகவும், நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதை நிறுத்துவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *