எரிபொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்கள் ஏற்படுகிறது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலும் எரி பொருட்களை பெற்றுக் கொள்வதில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
பெற்றோல் மற்றும் டீசலினை பெறுவதற்காகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சில வேலை எரி பொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளின்மை மூடிக் காணப்படுகிறது.
திருகோணமலை நகர், மூதூர், கிண்ணியா, முள்ளிப் பொத்தானை, கந்தளாய் உள்ளிட்ட பல எரி பொருள் நிரப்பு நிலையங்களில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது .
இன்றைய தினம் (09) திருகோணமலை முள்ளிப் பொத்தானையில் பெற்றோலினை பெறுவதற்காக நீண்ட வரிசை காணப்படுகிறது.
ஆனாலும் டீசல் இன்மை காரணமாக பாதையோரங்களில் வாகனங்கள் பல நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக திருகோணமலை – தோப்பூர் பகுதியில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் தோப்பூர் பகுதியிலுள்ள தேனீர் கடைகள், வெதுப்பகங்களௌ உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.இதனால் கடைகளில் வேலை செய்யும் பலர் தொழிலை இழந்துள்ளனர்.
மாதாந்த கடை வாடகை உள்ளிட்டவைகளை கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
கடைக்கு உணவு வாங்க வருகைதருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஒரு எரிவாயுவை பெறுவதற்கு திருகோணமலை நகருக்கு முச்சக்கர வண்டிக்கு 3000 ரூபாய் செலவிட்டு செல்ல வேண்டியுள்ளது.சில வேளை ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றோம்.
இந்த அரசாங்கம் மக்களை வரிசையில் நின்று போராட வைத்துள்ளது. பாண் வாங்குவற்குகூட கஷ்டப்படுகின்றார்கள்.
அரசாங்கத்தை விட்டு போகச் சொன்னாலும் அவர்கள் விட்டுப்போவதாக இல்லை.
எரிவாயு இல்லையென்று காட்டுக்கு விறகெடுக்க போனாலும் பொலிஸார் பிடிக்கின்றனர்.
என்ன செய்வதன்றே தெரியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அந்தளவிற்கு அரசாங்கம் மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித்தனர்.

