ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்.

நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் அரச தரப்பு ஆதரவாளர்களுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் பொலீஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பினும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் சற்றுமுன் ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பிலுள்ள வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *