
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால்கடந்த 30 நாட்களாக இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தற்போது அரச தரப்பு ஆதரவாளர்களுக்கும் எதிர் தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை தோன்றியது.
இந்நிலையில் அரச தரப்பு ஆதரவாளர்களால் கோட்டா கோ கம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் புடுங்கி எறிந்து அழிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடும் மோதல் இடம்பெற்றதுடன் குறித்த பகுதிக்கு கலகமடக்கும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்ப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான நிலையில் தற்போது கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் காரர்களால் அரசதரப்பு ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் சிலர் காலிமுகத்திடலுக்குஅருகில் உள்ள நீர் நிலைகளில் குதித்து தப்பியோடினர்.
இதேவேளை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய அரச ஆதரவாளர் ஒருவர் குப்பை வண்டியில் ஏற்றப்பட்டு ஊர்வலகமாக அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.