பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலக முன்னதாக இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விசேட உரையை ஆற்றியுள்ளார். இதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு

*அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை.

* நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

* பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும்.

* பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

* உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்- என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *