
சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தனது பதவியிலிருந்து விலகினார் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு- காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே அமைச்சர்கள் ஒவ்வொருவராக தமது பதவியிலிருந்து விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.