
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத் திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிலாபம் முன்னேஸ்வரத்தில் இருந்து சண்முகம் என்பவர் நடை பவனியாக தனது போராட்டத்தை இன்று ஆரம்பித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலக கோரி கொழும்பு காலி முகத் திடலில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டத்திற்கு மேலும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிலாபம் முன்னேஸ்வரத்தை சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் என்பவர் இன்று காலை 9.00 மணியளவில் தனி மனிதனாக போராட்டத்தை ஆரம்பித்தார்.
“சிலாபத்திலிருந்து காலி கோட்டா கோ கம” எனும் கருப்பொருளில் தனிநபராக நடை பவனியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
பிரத்தியங்கரா தேவி ஆலயம் மற்றும் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ் சுவாமி ஆலயங்களில் தேங்காய் உடைத்த பின்னர் அங்கிருந்து நடை பவணியாக கொழும்பு காலி முகத்திடல் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்.