தவறணைகளைத் திறப்பதற்கு அனுமதி!

தவறணைகளைத் திறப்பதற்கு அனுமதி!

யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் உள்ள அனைத்­துக் கள்ளுத் தவ­ற­ணை­க­ளும் நேற்­று   ­மு­தல் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன என்­றும், அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பனை அபி­வி­ருத்­திச் சபைத் தலை­வர் கிரி­ஷாந்த பத்­தி­ராஜ் தெரி­வித்­தார்.

நாட்­டில் தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது அனைத்து மது­பான விற்­பனை நிலை­யங்­க­ளும் மூடப்­பட்­டன. ஆயி­னும் கடந்­த­வா­ரம் மது விற்­பனை நிலை­யங்­க­ளைத் திறக்க அனு­மதி வழங்­கப்­பட்­டது. ஆயி­னும் பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் கிளைக­ளைத் திறக்க அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக தென்­ம­ராட்சி பனை, தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் கொத்­த­ணித் தலை­வ­ரும், பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் உறுப்­பி­ன­ரு­மான க.துரை­சிங்­கம், பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் தலை­வ­ரு­டன் இது­தொ­டர்­பில் கலந்­து­ரை­யா­டி­னார்.

கிளை­கள் தொடர்ந்து மூடப்­பட்­டுள்­ள­தால் சங்­கங்­கள் மற்­றும் தொழி­லா­ளர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. சபை­யின் தலை­வர், உரிய அமைச்­ச­ரு­டன் இது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யாடி  தவ­ற­ணை­க­ளைத் திறப்­ப­தற்கு அனு­மதி பெற்­றுக் கொடுத்­ததை அடுத்து, நேற்­று­மு­தல் தவ­ற­ணை­கள் இயங்க ஆரம்­பித்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *