
காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக அமைதியான வழியில் நடைபெற்ற அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய ஆர்ப்பாட்ட களத்தில் இன்று மதியம் புகுந்த அரச தரப்பு ஆதரவாளர்களால் போராட்ட களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு குழப்பகரமான நிலை காணப்பட்டு வருகின்றது.
இதேவேளை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் பயணித்த பஸ்ஸினை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சற்றுமுன் ஊர்வலமாக காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் பேரணியாக எடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.