கொழும்பு,மே 09
திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பஸ் ஒன்று பேர வாவியில் வீசப்பட்டுள்ளது.
