சில ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரை!

அமைச்சர்கள் உள்ளடங்களாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின் வீட்டுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீடு, சனத் நிஷாந்தவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *