வன்முறை சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – சட்டத்தரணிகள் சங்கம்

நாட்டில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வன்முறையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு நபரையும் தாக்கவோ, துன்புறுத்தவோ அல்லது எந்தவொரு சொத்துக்கும் சேதம் விளைவிக்கவோ கூடாது என்று பொதுமக்களிடம் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், பொது மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *