மகிந்த பதவி விலகல் – ரணிலின் அறிவிப்பு!

பிரதமர் மாத்திரம் இன்றி முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசேட அறிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.

கோட்டா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும், மோதல்கள் தொடருமானால் அது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *