மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள இல்லம் தீக்கிரை!

காலிமுகத்திடலில் இன்று மதியம் முதல் அசாதாரண நிலை தோன்றிவருகின்றது.

மதியம் காலிமுகத்திடலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபட்ட போதும் தற்போது வரை பல்வேறு பகுதிகளிலும் வன்துறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

இதேவேளை இன்று மாலை தொடக்கம் அரச தரப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள இல்லமும் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *