மஹிந்தவினதும் ஆளுங் கட்சி எம்பிக்கள் பலரினதும் வீடுகள் தீக்கிரை

குருணாகலையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டின் பல இடங்களிலுமுள்ள ஆளும் கட்சி எம்பிக்களின் வீடுகள் சொத்துக்கள் தீக்கிரையாகி உள்ளன.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்களால் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அமைதியான முறையில் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கும்பல் காலிமுகத்திடலுக்கு வருகை தந்து வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை தாக்கியதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களிலும் தீயிட்டு கொளுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *