அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! – சுமந்திரன்

தயவு செய்து அமைதி காக்கவும் எனவும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமது முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தயவு செய்து அமைதி காக்கவும். அகிம்சை எதிர்ப்புதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து எந்த விதமான வன்முறைகளிலும் ஈடுப்படாது விலகி இருங்கள்.

தயவுசெய்து நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *