
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தாக்கப்பட்டு பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாகிய கொழும்பு அலரி மாளிகையிலும் இன்று மாலை முதல் பதற்றமான நிலை காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அலரிமாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரி மாளிகையின் வாயில் கதவை உடைத்து நொறுக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்னும் அலரி மாளிகையில் தங்கி இருப்பதாகவும் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அலரி மாளிகைக்கு வெளியில் இரு புறங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தற்போதும் அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருவதுடன் சற்றுமுன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.