ஊரடங்கு நேரத்தில் யாரெல்லாம் வெளியில் செல்லலாம்?

கொழும்பு,மே 10

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை (11) காலை வரை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *