கடும் பாதுகாப்புடன் அதிகாலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய மஹிந்த

கொழும்பு, மே 10

மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிக்கையிலிருந்து இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறியுள்ளார்.

நேற்று நள்ளிரவுக்கு மேலாகவும் அலரி மாளிகை இளைஞர்களின் கடுமையான தாக்குதலுக்குள்ளானது. காவலரண்களை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதற்கு இளைஞர்கள் கடும் முயற்சி செய்தார்கள்.

கண்ணீப்புகை, நீர்த்தாரை தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த பொலிஸார் நேற்று நள்ளிரவு அளவில் துப்பாக்கிப் பிரயோகத்தையும், தடியடிப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.

பெருமளவு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புடன் மகிந்த அங்கிருந்து திடீஅரன வெளியேறியதாக ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *