
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தமது கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.