
இலங்கை நிலைமை தொடர்பில் சவூதி அரேபியாவின் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை தமது குடிமக்களுக்கு விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வன்முறை சம்பவங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் காரணமாக இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு தனது குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.