
அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டம் எனவும் வன்முறையை தூண்டும் நோக்கில் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தனது 4ஊடகப் பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை வன்முறை பலமிக்கவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். எனினும் வன்முறையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை நோக்கி திருப்பபட்டது எனவும் தெரிவித்துள்ளார்.