நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி நோயெதிர்ப்பு அளவை அதிகமாக்குகிறது: ஆய்வில் தகவல்!

நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி அளவு, மூன்றாவதைக் காட்டிலும் அதிகமாக நோயெதிர்ப்பு அளவை கொண்டிருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான கல்வியாளர்கள் குழு, மக்கள் குழுவையும் அவர்களின் நோயெதிர்ப்பு மற்றும் டி செல்களின் அளவையும் கண்காணித்து வருகிறது. இவை இரண்டும் வைரஸுக்கு எதிராக ஒரு நபரின் பாதுகாப்பின் அளவைக் குறிக்கும்.

இதன்படி, சுமார் 166பேர் ஆய்வில் பங்கேற்று இரத்த மாதிரிகளை வழங்கினர். இதன் பொருள் விஞ்ஞானிகள் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளின் செறிவை ஆராய முடியும்.

இதில் நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி அளவு, மூன்றாவதைக் காட்டிலும் அதிகமாக நோயெதிர்ப்பு அளவை கொண்டிருப்பதாக காட்டுகிறது.

பிரித்தானியா, நான்காவது டோஸ்களை 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இஸ்ரேல் மற்றும் ஜேர்மனி போன்ற சில நாடுகள் ஏற்கனவே அனைத்து பெரியவர்களுக்கும் நான்காவது டோஸ் வழங்கத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *