நாமல் குடும்பம் திருகோணமலை பயணம்!

காலிமுகத்திடலில் நேற்று பெரும் கலவரம் இடம்பெற்றதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

பதவி விலகயதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களால் கொழும்பு காலிமுகத்திடல், அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற அமைதியான போராட்டம் தாக்குதலுக்குள்ளானது.

இதனால் கொதிப்படைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களைத் தாக்கியதோடு அவர்களை இறக்கிய வாகனங்களையும் எரித்தனர்.

இது போதாது என கோபம் ஆவேசமாகியதையடுத்து அமைச்சர்களின் வீடுகள், வாகனங்கள் இரவோடு இரவாக எரியூட்டப்பட்டன.

அதுமட்டுமன்றி முன்னாள் பிரதமரின் வீடும் அவர்களின் குடும்ப வீடும் ராஜபக்சக் குடும்பத்தின் நினைவுத்தூபியும் அடித்து துவம்சம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கலவரம் உச்சமடைந்து வருகின்றதையறிந்த அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முயல்கின்றனர். இந்த நிலையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் இன்று அமைதியாக திருகோணமலை சென்று துறைமுகத்தில் பதுங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *