திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியை மக்கள் தற்போது முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
