
மைனா கோ கம, கோட்டா கோ கமவில் கலவரத்தில் ஈடுபட்ட தரப்பினரை அழைத்து வந்த பஸ்கள், கார்கள் இனங்காணப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீமூட்டப்பட்ட நிலையில், அவ்வாறு சேதமாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பிரதான வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக பஞ்சிகாவத்தை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பகுதிகளில் சேதமாக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களை கொண்டு செல்வதற்கான பணியில் ஏனைய வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன