மொரட்டுவையில் ‘சமன்லால் கோ கம’ உதயம்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளில் குழப்பநிலை தோன்றிதோடு அதன் எதிரொலியாக ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் காரியாலயங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு தீக்கிரையாக்கிய சம்பவங்களும் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் பல இடங்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சற்றுமுன் மொரட்டுவையில் நேற்று நடந்த கொடூரத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சமன்லால் பெர்னாண்டோவுக்கு எதிராக மொரட்டுவை மக்கள் ‘சமன்லால் கோ கம’ ஆர்ப்பாட்ட களத்தை திறந்துள்ளதோடு அங்கிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *