தாக்குதலில் காயமடைந்த எம்.பி. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!

பொது மக்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கொழும்பின் புறநகர் – மகும்புர பிரதேசத்தில் நேற்று பொதுமக்களால் அவரின் வாகனம் தாக்கப்பட்டபோது சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு நாட்பட்ட நோய் ஒன்றின் தாக்கம் தீவிரமடைந்தமையால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *