
கொழும்பு, மே 10
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் இளைஞர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இலங்கையின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்காகக் கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.ஏற்கனவே இன்று அதிகாலையில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லக்கூடும் என்று தகவல்களின் அடிப்படையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.