
திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சந்தேகம் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் சென்றதாகவும் அதில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் காணொளிகள் வெளியாகின.
இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அங்கிருக்கும் ராஜபக்ஷர்களை வெளியே அனுப்புமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக நூற்றுகணக்கானோர் போராட்டம், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது#lka #SriLanka #Trincomalee pic.twitter.com/VjnupQAkLb
— Vithushan Jeyachandran (@imjvithu) May 10, 2022